Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்., தலைவரின் சோகம்

ஜனவரி 03, 2020 08:03

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆதவனூர் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் இன்று (ஜன.,3) உடல்நலக்குறைவால் அதிகாலை 5 மணி அளவில் உயிரிழந்தார்.

பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல்(65). இவருக்கு ஜோதிமணி(65) என்ற மனைவியும், 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். உள்ளாட்சி தேர்தலில், ஆதவனூர் பஞ்சாயத்து தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்ட அவர், 166 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 962 ஓட்டுகள் கிடைத்தன. வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்டார்.

கடந்த சில நாட்களாக சளி, இருமலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் மணிவேலை, அரியலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற்ற மறுநாளே இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்